Tuesday, March 31, 2020

மனதில் தோன்றியது

நீ என்னதான் நேர்மையாக இருக்க முயற்சித்தாலும்
இந்த உலகம் உன்னை பொய்யாக நடிக்க சொல்லி வேடிக்கை பார்க்கும்.

Friday, April 6, 2018

சச்சின் ஏன் கடவுள் ஆனார்:

இன்று நாம் சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக பார்ப்பதற்க்கு என்ன காரணம்.அவர் சிறந்த கிரிக்கெட் வீரரா அல்லது கிரிக்கெட்டை கண்டுபிடித்தவரா இல்லை என்பது தான் எனது பதில்.

அவர் சிறந்த வீரராக இருந்திருந்தால் நமது கைத்தட்டல்களை,பாரட்டுகலையும் பெற்றிருப்பார்.பிராட் மேனை போல் கிரிக்கெட்டின் நயகன் என்றோ,மற்ற சிறந்த வீரர்களை போல் பெயர் எடுத்திருப்பார்.கிரிக்கெட்டை கண்டுபிடித்தவராய் இருந்திருந்தால் வரலாற்றில் இடம் பிடித்திருப்பார்.நிகழ்காலத்தில் நம்மில் அவருக்கு இடம் இருந்திருக்காது.

சச்சினை விட சிறந்த வீரர்களை நம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம்.
சச்சின் பேட்டை துக்குவதற்க்கு முன்பே கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர்கள் பலர்.ஏன் சச்சினுக்கு பாடம் நடத்திய மகான்கள் இருக்கையில்.சச்சினை ஏன் நாம் கடவுளாக பார்க்கிறோம்.

அவர் தான் சச்சின்.அவர் கிரிக்கெட்டின் மகாத்மா.கிரிக்கெட் விளையாட்டில் அவர் நமக்கு கிரிக்கெட்டை மட்டும் கற்றுதரவில்லை.
பண்பையும்,அகிம்சையையும்,மனித தன்மையையும் சேர்த்து கற்றுக்கொடுத்தார்.

வீரன் என்ற பெயரை அனைவரும் பெற்றுவிடலாம்.
ஆனால் மகாத்மா என்ற பெயரை எடுப்பதற்க்கு தவம் இருக்க வேண்டும்.

கிரிக்கெட்டை  தவமாக நினைத்து வாழ்ந்தவர் தான் சச்சின்.
அந்த தவத்தை சரியாக நிறைவு செய்ததால் தான் சச்சின் கடவுள் ஆனார்.

Friday, September 8, 2017

யார் சுதந்திர தியாகி

சுபாஷ் சந்திர போஷ்
சுபாஷை கையில் எடுப்பவர்கள்,காங்கிரஸ் இயக்கத்தையும் மற்ற தலைவர்களையும் குறை சொல்லித்தான். சுபாஷை முன் நிறுத்துவார்கள்.சுபாஷ் முன் எடுத்ததாக ஒரு போரட்டத்தை சொல்லி முன் நிறுத்தமாட்டார்கள்.இந்த செயல் சுபாஷ் ஆதரவு அல்ல.காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க தோண்றுகிறது.

Tuesday, August 8, 2017

சிலைவழிபாடும் முரன்பாடும்

திரவிட முரன்பாடு:
திரவிட கொள்கையில் முரண்பாடு  என்பது இன்று நேற்று ஏற்படவில்லை.இந்த திரவிட கொள்கையை வகுத்த பெரியாரிடமே காணப்பட்டது.
பெரியார் போட்ட குட்டிகல் தான்(அனைவரும் அல்ல, ஒருசிலர்)இந்த முரண்பாடுகளை நிருபிக்கும் வண்ணம் கூக்குரல் இடுகின்றன.
அவர்களிடம் எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை.
சாதி ஒழிப்பு முரண்பாடு:
                                     திரவிடர்கள் சொல்வார்கள் எங்கள் கொள்கையின் நோக்கம் சாதி ஒழிப்பு என்று.ஆனால் தாழ்த்தப்பட்டவருக்கான விடுதலை தான் சாதி ஒழிப்பு என்பார்கள்.
இவர்கள் சொல்வதை பார்த்தால்.மற்ற எல்ல சாதிகலும் ஒற்றுமையாக இருப்பது போலவும்,இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆதி தமிழர்களை(இவர்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டவர் என்று இல்லாத ஒன்று)அடிமைபடுத்துவது போல காட்டுகிறார்கள்.
உங்கள் கருத்துபடி பார்த்தால். மற்ற சாதிகள் ஒற்றுமையாக இருக்கும் போது எதர்க்கு நீங்கள் பிரமினர் எதிர்ப்பு என்றிர்கள்.சாதிவாரி இட ஒதுக்கிடு கேட்கிறிர்கள்.இதற்க்கு பெயர் சாதி ஒழிப்பா,தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றமா,சாதி பிரிவினையா.சாதி ஒழிப்பு என்றால் அனைத்து சாதிகளை சமமான தட்டில் வைத்து பார்த்து சாதி ஒழிக்க முயன்றால் தானே.அதை சாதி ஒழிப்பு என்று சொல்ல முடியும்.அப்போ திரவிடர்களின் நோக்கம் சாதி ஒழிப்பு அல்ல.சாதி வைத்து சுயலாபம் தேடுகிறார்கள்.
கடவுள் மறுப்பு முரண்பாடு:
                        அவர்கள் அடுத்த கொள்கையாக முன் வைப்பது.கடவுள் மறுப்பு.இவர்கள் கடவுள் இல்லை என்பார்கள்.முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்தால் மூட நம்பிக்கை.ஆனால் நோம்பு துறக்க மசூதி(அல்லவை)நாடுவார்கள் இது என்ன நம்பிக்கை பெரியார் நம்பிக்கையா.அப்படி என்றால் இவர்கள் நோக்கம் கடவுள் மறுப்பா அல்லது இவர்களை(தெலுங்கு சகோதரர்களை) ஒழித்த பிரமினர்களை ஒழிக்கும் செயலா.கடவுள் மறுப்பு என்றால் அனைத்து மத நம்பிக்கை,கடவுள் கோட்பாடு இதை அனைத்தையும் மறுத்தால் தானே. அதை கடவுள் மறுப்பு என சொல்ல முடியும்.
தீண்டமை ஒழிப்பு முரண்பாடு:
                                                அடுத்து இவர்கள் வைக்கும் கொள்கை தீண்டாமை ஒழிப்பு.தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பார்கள்.அயிரமுறை இவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகாதவர்கள் என்பார்கள் அதை ஊரெங்கும் உரைப்பார்கள்.தீண்டாமை ஒழிக்க இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஆதி தமிழர்களுக்கு இட ஒதிக்கிடு கேட்பார்கள்.இட ஒதிக்கிடு என்பது இரு நாடுகலுக்கு இடையே உள்ள எல்லை கோடு போன்றது தான். எல்லைக்கோடுகளை வைத்துக்கொண்டு சகோதர துவத்தை எப்படி வளர்க்க முடியும்.அது போல இட ஒதிக்கிடு எப்படி தீண்டாமையை ஒழிக்கும்.மேல்மேலும் தீண்டாமை வளர்க்கத் தான் செய்யும்.
சுயமரியாதை முரண்பாடு:
                                        சுயமரியாதை இயக்கம் வளர்ப்பார்கள்.சுயமரியாதை வேண்டும் என்பார்கள்.ஆனால் அடுத்தவரை சிறிதும் மரியாதை இல்லாமல். வெங்காயம்,வெருங்காயம்,பெருங்காயம்,தேசி மகன,வேசி மகன் என்பார்கள்.சுயமரியாதை உடம் வாழ ஆங்கிலம் படிக்க சொல்வார்கள்.ஆனால் தங்களை தமிழர் தலைவர் என்று சொல்லிக்கொள்வார்கள்.
சிலைவழிபாடும் முரண்பாடும்:
                                                சிலை வழிபாடு முடத்தனம் என்பார்கள். ஆனால் ரஷ்யா சென்றால் சாக்ரெடிஸ் சிலை முன் நின்று புலம்புவார்கள்.அம்பேத்கார்,பெரியார் சிலைக்கு மலர் துவுவார்கள்.இது என்ன சிலை வழிபாடு இல்லாமல்,சிலந்தி வழிபாட.
இது போன்று தங்கள் சுயலாபத்திர்க்காக.இன்னும் இது போன்ற அர்த்தம் அற்ற கொள்கைகளை தூக்கி கொண்டு திரிகிறார்கள்.

மனதில் தோன்றியது

நீ என்னதான் நேர்மையாக இருக்க முயற்சித்தாலும் இந்த உலகம் உன்னை பொய்யாக நடிக்க சொல்லி வேடிக்கை பார்க்கும்.

சிறந்த படைப்பு